• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

முள்ளியவளை ஊற்று வெள்ளத்தால் இன்னலுக்கு உள்ளாகும் மக்கள்

Editor1 by Editor1
January 14, 2024
in இலங்கைச் செய்திகள், வன்னி
0
முள்ளியவளை ஊற்று வெள்ளத்தால் இன்னலுக்கு உள்ளாகும் மக்கள்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

முள்ளியவளையில் ஊற்று வெள்ளத்தால் வழுக்கி விழும் மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

ஊற்று வெள்ளத்தினால் வீதியை மூடி தண்ணீர் பாய்கின்றதால் வழியெங்கும் பாசி வளர்ந்துள்ளது.

கவனமெடுக்காத முள்ளியவளை பிரதேசசபையின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் அப்பகுதி மக்கள் பாதையை பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து முள்ளியவளை சந்தை வரையான உள் வீதியொன்றே பாதிக்கப்பட்டுள்ளது.

வைகாசி வரை தொடரும்
ஒவ்வொரு வருடமும் இது போல் ஊற்று வெள்ளம் பாயும். ஆனாலும் இந்த வருடம் இதன் அளவு அதிகமாக இருக்கின்றது.

இம்முறை வீதியை மூடி ஊற்று வெள்ளம் பாய்வதால் வீதியால் பயணிக்கும் போது நீருக்குள்ளால் தான் பயணிக்க வேண்டி இருப்பதாக அந்த வீதியினை பயன்படுத்துவோர் தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்கள்.

ஆறாம் கட்டைப் பகுதியில் உள்ள நீர் வற்றும் வரை இந்த வெள்ள ஊற்று ஓடிக்கொண்டே இருக்கும் என அவ்வீதியோரத்தில் குடியிருக்கும் மக்கள் பலர் குறிப்பிடுகின்றனர்.

ஆறாம் கட்டைப் பகுதி என்பது காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு தெற்குப் பகுதியில் உள்ள நிலப்பகுதி ஆகும்.

அங்குள்ள நிலம் ஈரலிப்பாகவும் நீர் கசிவுடையதாகவும் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அவ் நிலத்தில் வாழும் மக்கள் நிலத்தின் நீர்க்கசிவு சூழலை எதிர்கொண்டு வாழப் பழகியுள்ளார்கள் என்பதனை அவர்களுடன் உரையாடிய போதும் அவர்களது அன்றாட செயற்பாடுகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதிலிருந்தும் அறிய முடிகின்றது.

ஆறாம் கட்டைப் பகுதியில் இருந்து ஊற்றெடுத்து வரும் வெள்ள நீரோட்டம் காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு முன்னாக உள்ள வடிகாலினூடாக பாய்ந்து கோவிலுக்கு வடக்கு பகுதிக்கு செல்கின்றது.

ஊற்று வெள்ளம் மேவிய பாதை கோவிலுக்கு வடக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதை மேவிய வெள்ளத்தின் பாய்ச்சல் இந்த ஆண்டு வைகாசி மாதம் வரை தொடரும் என ஒருவர் குறிப்பிட்டமையும் நோக்கத்தக்கது.

தூர்ந்துபோன வடிகால்கள்
காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு வடக்கு பகுதியிலுள்ள நிலங்களிலும் நிலம் ஈரலிப்பாகவும் நீர்க்கசிவோடும் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

குடியிருப்பு நிலங்களில் இருந்து ஊற்றெடுத்து வரும் வெள்ளம் வீதியில் உள்ள வடிகாலுக்கு சேரும் வகையில் வெட்டி விட்டுள்ளனர்.

வடிகாலினூடாக வடிந்தோடும் போது வடிகால்களின் கொள்ளளவு குறைவாகவும் சில இடங்களில் வடிகால் தூர்ந்துள்ளதாலும் வெள்ளம் வீதியின் மேல் பாய்ந்து கொண்டிருக்கின்றது என அவ்வூர் கல்வியாளர் ஒருவர் நிலைமையை விளக்கியிருந்தார்.

கொங்கிறீற்று பாதையை அமைக்கும் போது வீதியின் இரு பக்கங்களிலும் வடிகால்கள் இருப்பதனை உறுதி செய்திருக்க வேண்டும்.

ஆனாலும் அவர்கள் வீதியமைப்பில் எடுத்த அக்கறையளவுக்கு வடிகால்களின் அவசியத்தை கருத்திலெடுத்து செயற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடிகால் போதியளவு கொள்ளளவை கொண்டிருந்தால் பாதை மேவிய ஊற்று வெள்ளம் இருந்திருக்காது.

இந்த பாதையில் சில இடங்களில் வடிகாலின் வழியே ஊற்று வெள்ளம் பாய்வதனையும் அவ்விடங்களில் பாதைமேவிய ஊற்று வெள்ளம் இல்லை என்பதையும் அவர் தனது கருத்துக்கு அரண் சேர்க்கும் வண்ணம் சுட்டிக் காட்டியமையும் நோக்கத்தக்கது.

மக்கள் எதிர்கொள்ளும் துயர்
பாதை கொங்கிறீற்று பாதையாக இருக்கின்றது. ஊற்று வெள்ள நீர் மூன்று சென்றி மீற்றருக்கும் கூடிய உயரத்திற்கு ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு பாய்ந்த வண்ணம் இருக்கின்றது.

நீண்ட நாட்களாக தொடர்ந்து பாய்வதால் பாதையில் உள்ள கொங்கிறீற்று பகுதியில் பாசி பிடித்துள்ளது.

நடந்து செல்லும் போதும் மோட்டார் சைக்கிளுடன் வருவோர் கால் ஊன்றி நிற்கும் போதும் சறுக்கி விழுந்த நிகழ்வுகள் நடந்தவாறு இருப்பதாக வீதியை சுத்தம் செய்துகொண்டு இருந்த முதுசமொருவர் குறிப்பிட்டார்.

சில தினங்களுக்கு முன்னரும் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருப்பும் போது சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக குறிப்பிட்டார். அந்த விபத்திற்குள்ளானவருக்கு கால் முறிந்து விட்டதாகவும் அந்த வயோதிப மாது குறிப்பிட்டார்.

வீதியோரத்தில் சேரும் குப்பைகளை தான் தினமும் அகற்றுவதாகவும் தண்ணீர் வைகாசி அளவில் தான் வற்றும்.

அது வரையும் தன் இந்த முயற்சி தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறுவர்கள், வயதானவர்கள் என பலரும் இந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் அவர்களும் சறுக்கி விழுகின்றனர் என்பதும் அவருடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

இணைப்பு வீதிகளின் சிறு பாலங்கள் சேதம்
இந்த பாதை வழியே பயணித்து மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் பல இடங்களில் இணைந்து கொள்ளும் வண்ணம் பல இணைப்பு வீதிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொங்கிறீற்று பாதையில் இருந்து ஏனைய இணைப்பு வீதிகளுக்கு செல்லும் போது அவற்றை இணைக்கும் சிறு பாலங்கள் சேதமடைந்திருப்பதும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்றாகும்.

வீதியில் உள்ள பாசியும் அதனை அகற்றலும்
கொங்கிறீற்று நிலங்களில் நீர் தேங்கிய இருந்தாலோ அன்றி நீண்ட காலத்திற்கு நீரோட்டம் இருந்தாலோ அதன் மீது பாசி எனப்படும் வழுக்கும் நிலையை ஏற்படுத்தும் படிவுகள் தோன்றுகின்றது.

காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து முள்ளியவளை சந்தை வரை உள்ள வீதியொன்றில் முந்நூறு மீற்றர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீற்று பாதையில் பாசி வளர்ந்துள்ளது.

அதனை அகற்றுவதில் அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் அதிக முயற்சிகளை செய்தவாறு இருக்கின்றனர்.

 

பிரதேச சபையினரும் இது தொடர்பில் கூடியளவு கவனம் எடுப்பதாகவும் மக்களில் சிலர் குறிப்பிட்டனர். வீதியின் நிலத்தினை மணலால் துண்டாடி குளோரீன் எனும் பாசி நீக்கியை பயன்படுத்தினால் கொங்கிறீற்று பாதையில் உள்ள பாசிகள் நீங்குவதோடு அதன் மீதுள்ள வழுக்கும் இயல்பும் நீங்கும் என அறிவியல் துறையில் ஈடுபாடுள்ள விஞ்ஞான பாட ஆசிரியர் ஒருவர் இது தொடர்பில் கருத்துக் கேட்ட போது குறிப்பிட்டார்.

குளோரீனை பயன்படுத்துமளவுக்கு நீரோட்டம் இருப்பதாகவும் பாதையில் முழு நீளத்திற்கும் இம்முறையில் தீர்வு காண முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செயற்பாட்டை ஒருங்கிணைத்து செயற்படுத்த யார் முன்வருவார்கள் என அவர் கேள்வியெழுப்பியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Previous Post

உலகின் மிக நீளமான ஓவியத்தை வரைந்து சாதனை படைத்த பெண்!

Next Post

மின் கட்டணத்தை குறைக்க முன் வரும் இலங்கை!

Editor1

Editor1

Related Posts

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
இலங்கைச் செய்திகள்

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து
இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைச் செய்திகள்

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
Next Post
மின் கட்டணத்தை குறைக்க முன் வரும் இலங்கை!

மின் கட்டணத்தை குறைக்க முன் வரும் இலங்கை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy