கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் பெருமளவிளான போதை மாத்திரைகளுடன் ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 4100 போதை மாத்திரைகளை தன்னகத்தே வைத்திருந்த பாடசாலை ரக்பி பயிற்சியாளர் ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து மேலும்2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.