கதிர்காமம் – புத்தல வீதியில் ரஷ்ய தம்பதியர் பயணித்த கார் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் காட்டு யானை தாக்கியதில் தம்பதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யானை தாக்குதலில் ரஷ்ய தம்பதியர் பயணித்த வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



















