யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கைகையானது நேற்று(25) இடம்பெற்றுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.