தற்போதைய நிலையில் பேருந்துக் கட்டணங்களை எந்த வகையிலும் குறைக்க முடியாத என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன திட்டவட்டமாக (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணக் குறைப்பு தொடர்பில் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது அவர் இதனை கூறியுள்ளார்.
பேருந்துக் கட்டணம்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“டீசல் லீற்றரின் விலை நேற்றிரவு (30) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் ஜூலை மாதத்திலேயே பேருந்துக் கட்டணங்களை குறைக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.