• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Editor1 by Editor1
May 18, 2024
in இலங்கைச் செய்திகள்
0
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில், மன்னாரிலும் (Mannar) நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

அதனடிப்படையில், மன்னாரில் இன்றைய தினம் சனிக்கிழமை (18.05.2024) காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டிலும் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையிலும் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

விடுக்கப்பட்ட அறிக்கை
இதன் போது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடரை அருட்தந்தை நவரட்னம் ஏற்றி மாலை அணிவித்து நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15ஆவது ஆண்டு நினைவேந்தலையொட்டி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இனப்படுகொலை நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிய போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

ஏமாற்றும் சர்வதேசம்
பல்வேறு விதமான ஆணைக்குழுக்கள் அனைத்தும் பயனற்று போனது. தமிழ் அரசியல்வாதிகளும் ஒழுங்கு முறையான திட்டமிட்ட தொடர் நடவடிக்கை எதையும் இனப்படுகொலை விவகாரத்தை முன்னோக்கி நகர்த்தவில்லை.

அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள், ஒடுக்கு முறைகள், தனிமனித பேச்சு சுதந்திர அடக்கு முறை, விசாரணைகள், அச்சுறுத்தல்கள், சிவில் செயற்பாட்டில் இராணுவ தலையீடு மற்றும் பௌத்த ஆக்கிரமிப்பு போன்றவற்றை மேற்கொள்கிறது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் எந்த மாற்றத்தையும், ஏற்றத்தையும், ஏற்படுத்தவில்லை. மாறாக தொடர்ந்து வலியையே ஏற்படுத்தி வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் அர்த்தம் இல்லாத நடைமுறைச் சாத்தியமற்ற தீர்மானங்களை காலத்துக்கு காலம் எடுத்ததே தவிர அதனால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு எந்த மாறுதலும் நிகழவில்லை வெறும் காகிதங்களுடன் முடங்கிப் போனது.

மனித உரிமை ஆர்வலர்கள் என உலகின் பல பாகங்களிலும் இருந்து இங்கு வந்து எம்மை வேடிக்கை பார்த்தனரே தவிர நீதியை நிலைநாட்ட வில்லை. உலகின் எல்லா கனவான்கள் என வேடம் தரித்தவர்கள் சேர்ந்தே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றினார்கள்.

அவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த உலகம் வலியோனுக்கு நீதியையும் அறத்தையும் நியம நியதிகளுக்குள் ஒருபோதும் நிலை நாட்டியதாக எங்கும் வரலாறு இல்லை எல்லாம் நலன் சார்ந்த நிகழ்தகவுகளே.

அநீதியை விதைத்தவனிடம் நீதியின் நிர்ணயத்தை எதிர்பார்க்க முடியுமா? இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேசமும் எம்மை தொடர்ந்து ஏமாற்றி இனப்படுகொலையின் பங்கு தாரராகியது.

நீதியை பெற்றுக் கொள்வதற்கான வழி
நீதி போதிக்கும் சம தர்மம் மனித உரிமை வாழ்வியல் உரிமை என உச்சரிக்கும் அநீதிக்கு துணை போகும் நீதி இல்லா நாதியற்ற போலி கனவான்களே, இனியாவது உங்கள் ஏமாற்று வேலையை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இந்த உலகம் இனியும் உங்களை நம்ப தயார் இல்லை. 15 ஆண்டுகளில் உங்கள் ஏமாற்று வித்தைகளை எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்புகள் நன்கு உணர்ந்து விட்டன.

ஆகவே எமக்குள் நாம் பேதங்களை கடந்து இனத்துவ, மொழித்துவ, வாழ்வியல், சுயநிர்ணய உரித்துக்களை பெற ஒருமித்து ஒருங்கிணைவதே ஒரே வழி.

அது தான் எமக்கான நீதியை நாமே பெற்றுக் கொள்வதற்கான வழியும் ஆகும். 15 ஆண்டுகள் வெறுமையாக பயனின்றி கடந்து விட்டது என்பதே கசப்பான உண்மை.

இதற்கு வல்லான்மை அற்ற தமிழ் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும். ஆகவே தமிழர் ஒரே தேசமாக திரள்வோம். அதுவே நமக்கான இன்றைய தேவை. இல்லையேல் முள்ளிவாய்க்காலில் மரணித்த ஆன்மாக்கள் நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

அது நிகழாத வரை சிங்கள தேசம் நம்மை பிரித்தாளும் வேலையே தொடர்ந்து செய்யும். ஆகவே விழித்துக் கொள்ள வேண்டியது நாம் தான் – என்றுள்ளது.

Previous Post

மறிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி!

Next Post

5ஜி ஸ்மார்ட்போன்கள்! அட்டகாசமான சிறப்பம்சங்கள்

Editor1

Editor1

Related Posts

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு
இலங்கைச் செய்திகள்

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

December 6, 2025
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
Next Post
5ஜி ஸ்மார்ட்போன்கள்! அட்டகாசமான சிறப்பம்சங்கள்

5ஜி ஸ்மார்ட்போன்கள்! அட்டகாசமான சிறப்பம்சங்கள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025

Recent News

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy