கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புக்கள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே உயர்தர வகுப்புக்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமாக உள்ளது.
உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பது குறித்து யோசனைக்கு அமைச்சரவை கடந்த மே மாதம் 14 ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, பரீட்சார்த்தமாக கொழும்பு ஆனந்த கல்லூரியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.