களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் சாதனம் ஒன்று மிதந்து வந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சாதனம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தங்கியிருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன், பரிசோதனைக்காக அந்த சாதனத்தை பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளனர்.