இந்தியாவில் ஆந்திர மாநிலம், பீமலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பார்கவ் என்ற இளைஞன், கடந்த 5 மாதங்களாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் குறித்த இளைஞனை நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பரவி அவர் உயிரிழந்துள்ளார்.
மகன் உயிரிழந்ததில் இருந்து அவரது தந்தை படுத்த படுக்கையாகி விட்டார். மகனை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
ஆசை ஆசையாக வளர்த்த செல்லப்பிராணியால் ஒரு வீட்டில் இரண்டு உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளமை அந்தப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.