திருக்கோணமலை மூதூர் – ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே யானை தாக்குதலுக்கு இலக்காகி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் கிளிவெட்டி மகாவித்தியாலயத்திற்கு பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது ஸ்ரீ நாராயணர் ஆலயத்திற்கு முன்னால் வைத்து யானை தாக்கியுள்ளது.
யானை தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி | Student Admitted Hospital Being Attacked Elephant
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு முதல் காட்டு யானைகளின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், நீண்டகாலமாக மூதூர் பகுதியில் காட்டு யானைகளினால் தொடர்ச்சியான பல தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகி வருவதோடு பயிர்களையும் சேதம் செய்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.