காலி சிறைச்சாலைக்குள் இருந்து பெருந்தொகையான தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி சிறைச்சாலைக்குள் சிறைச்சாலைத் திணைக்களத்தின் புலனாய்வு மற்றும் சோதனைப் பிரிவு இன்றைய தினம் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை மூலம் இவை மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது சிறைச்சாலைக் கைதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 59 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபக்கப்படுகிறது..
அவற்றில் ஐந்து கைத்தொலைபேசிகள் ஸ்மார்ட் ரக தொலைபேசிகள் என்றும் ஏனைய 54 தொலைபேசிகளும் சாதாரண ரக கைத்தொலைபேசிகள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிறைச்சாலைகள் திணைக்கள புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டுள்ளது.