அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பிறகு நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதும் கடலொர பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இருந்தும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதேபோல, பலரும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி சென்று சுனாமி வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இருக்கிறதா? என பார்த்தனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டதால் மக்களின் அச்சத்திலிருந்து வெளியே வந்தனர்.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.
மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அவசர குழுவினர் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் கூறினர்.