கடந்த ஜுலை மாதம் 19 ஆம் திகதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் சர்வதேச அளவில் முடங்கியது.
இதற்கு மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்றையதினம் (10-12-2024) நள்ளிரவில் திடீரென உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சேவை பாதித்துள்ள நிலையில் பயனாளர்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் சேவை முடங்கியதால் அவுட்லுக், எக்செல், ஒன் ட்ரைவ் 1ம போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.




















