ஹைட்ரோலிக் சுண்ணாம்பு இறக்குமதி செய்வதன் மூலம் பெரும் தொகை நிதியை சம்பாதித்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு சுமார் 550 மெற்றிக் தொன் ஹைட்ரோலிக் சுண்ணாம்பு வந்துள்ளதாகவும், இவை காலி, அம்பதலே மற்றும் ரத்மலானை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குறிப்பிட்டார்.
குழாய் நீரை சுத்திகரிப்பதற்காக ஹைட்ரோலிக் சுண்ணாம்பு பயன்படுத்துகின்றன.
இலங்கையில் தற்போது குழாய் நீரில் அதிக அளவு குரோமியம் உள்ளது, இது புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.



















