முகநூலில் நட்பால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,
பேஸ்புக்கில் மாக் என்பவருடன் நட்பு வேண்டுகோள் வந்தது அதன் மூலம் அவர் என்னுடன் நட்பாகினார். குறித்த நணபர் எனது வாட்ஸ் அப் இலக்கத்தை வாங்கி அதனூடாகவும் வாட்ஸ் அப்பில் என்னுடன் தொடர்பு கொண்டார்.
2024 மே 31 ல் எனது முகவரியை கேட்டார். முதலில் நான் இவருக்கு முகவரியை வழங்கவில்லை. பின்னர் தனது பிறந்தநாளை என்னுடன் கொண்டாட இருப்பதாகவும் எனக்கு ஒரு பரிசுப்பொதி அனுப்ப இருப்பதாகவும் கூறி முகவரியை கேட்டபோது, நான் எனது முகவரியை அனுப்பினேன்.
மே மாதம் 31 மாலையில் எனக்கு டெல்டா கொரியர் சேர்விஸ் எனும் நிறுவனத்தினூடாக பொதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜுன் 1 ம் திகதி கொழும்பில் இருந்து தகவல் வரும் என தகவல் அனுப்பினார்.