அனுராதபுர (Anuradhapura) மருத்துவமனையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (17) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்னேவ புதிய நகரத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான நிலந்த மண்டுரங்க ரத்நாயக்க என்பவர், கல்னேவ நிதிகும்பயாய பகுதியில் பொலிஸாரும் சிறப்புப் படையினரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















