நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.
மேலும் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.