தேர்தலின் போது எடுக்கும் முடிவுகளை தமக்கு அறிவிக்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காமல் சில அமைச்சுகள் சில முடிவுகளை எடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பின்னர் அது குறித்து ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு தவறுகளை திருத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் எடுக்கப்படும் சில முடிவுகள் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கு இடையூறாக அமையலாம் என்பதால் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.