இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590இற்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில், வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் வீதி விபத்துகளில் சராசரியாக தினமும் 7 முதல் 8 பேர் வரை இறக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.