அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினரும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறப்பர் தொழிலாளர்கள் பாரியளவு பாதிப்பை எதிர்நோக்கக் கூடும் என அந்த தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில், சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இறப்பரை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனச் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் குறிப்பிட்டுள்ளார்.