யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரினால் இறுதியாண்டு சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் தற்போது விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் நிர்வாகத்தினால் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலம் வரை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றிய குறித்த மாணவனால் தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத்தடை சட்ட நியமங்களிற்கு அப்பாற்பட்டதெனக் குறிப்பிட்டு கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.