முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (Cid) முன்னிலையான போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த நாமல், “சமூக ஊடகங்களில் என்ன பேசப்பட்டாலும், நான் வீட்டிற்குச் சென்றபோது தந்தை நலமுடன் இருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.
இது தொடர்பில் பதிலளித்த மகிந்தவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த தகவல்கள் தவறானவை என்றும், அவர் தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருப்பதாகவும் கூறியமை குறிப்பிடத்தக்கது.