தேர்தல் சட்டவிதிமுறை மீறல் தொடர்பாக நேற்று (15) தேர்தல் ஆணைக்குழுவுக்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதற்கமைய, கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பில் மொத்தமாக 1,387 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் 86 வன்முறைச் சம்பவங்களும், 1,293 தேர்தல் சட்ட மீறல்களும் உள்ளடங்குகிறது.
இருப்பினும், மொத்த தேர்தல் முறைப்பாடுகளில் 1,293 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது



















