2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்று பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில், அதே வேளையில், துல்லியமாக, உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்கணித்து வழங்கி வருகிறார்.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகையே புரட்டிப்போடும் சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று மிகத் தெளிவான கனவு மூலம் முன்கணித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பும், பாபா வங்கா கணிப்புகள் துல்லியமாக நடந்திருப்பதால், இவரது கணிப்புக்களை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மங்கு கலை ஓவியராக உலகுக்கு அறிமுகமான ரையோ, தனது தெளிவான கனவுகளில் காணும் சம்பவங்களை வரையத் தொடங்கினார்.
அவர் 1980 முதல் தனது தெளிவான கனவுகளை வரையத் தொடங்கி, அது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது ஓவியங்களை ஆதரவாளர்கள் தொடர்ந்து பார்த்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உலகில் நடந்த சம்பவங்களோடு ஓவியங்கள் ஒத்துப்போவதை கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில்தான் தற்போது மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில்தான் தற்போது மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




















