• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம்.

Editor1 by Editor1
April 20, 2025
in இலங்கைச் செய்திகள்
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம்.
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை குறித்த தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கான உண்மை காரணியை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டனர். இது சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்ட மிக் மோசமான பயங்கரவாதத் தாக்குதல் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று சஹ்ரானுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஒரு இருந்தது என்பதையும் இன்று முழு நாடும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதற்கமைய சஹ்ரானுக்கு அரசியல் ரீதியாகவும், ஏனைய வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதே தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதியாகும். 21ஆம் திகதி இது குறித்து விசேட அறிவிப்பொன்று வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்காகவே நாமும் காத்திருக்கின்றோம். இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் சிவில் அமைப்புக்கள், ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.

சாரா ஜெஸ்மின் என்ற பெண் சஹ்ரானுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட ஒருவராவார். சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் சாரா உயிர் பிழைத்துள்ளதாக சஹ்ரானின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதும், சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் மீட்க்கப்பட்ட சடலங்களில் சாரா ஜெய்மினுடைய சடலம் காணப்படவில்லை என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வகையில் சாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்கேற்றிருந்தார். சாரா ஜெஸ்மின் தொடர்பில் அவர்களிடம் அரசாங்கம் ஏதேனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததா? சாரா இந்தியாவிலிருப்பது உண்மை எனில் அவரை நாடு கடத்துமாறு ஏதேனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதா? சாரா ஜெஸ்மின் கண்டு பிடிக்கப்பட்டால் இதன் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரியை இனங்காண்பது மிக இலகுவானதாகும்.

2019 ஏப்ரல் 20ஆம் திகதி இரவு சங்ரிலா ஹோட்டலில் சஹ்ரான் மற்றும் இலாம் என்ற நபரும் தங்கியிருந்தனர். 21ஆம் திகதி அவர்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 2019 ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை சங்கிரா ஹோட்டலிலுள்ள சகல அறைகள் தொடர்பான தகவல்களும் கோரப்பட்டுள்ளன. இதன் போது சஹ்ரான் தங்கியிருந்த 616 இலக்க அறையில் ஏப்ரல் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் தங்கியிருந்தவர்கள் யார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

2019 ஏப்ரல் 14 முதல் 19 வரை சஹ்ரான் தங்கியிருந்த 616 இலக்க அறையில் தங்கியிருந்தோர் தொடர்பான தகவல்கள் இல்லை. குறித்த அறைகளில் கதவுகளைத் திறப்பதற்கு இலத்திரனியல் அட்டையே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சஹ்ரானின் அறைக்கான இலத்திரனியல் அட்டை மாத்திரம் ‘விருந்தினர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய அறைகளுக்காக அட்டைகள் தொடர்பான தரவில் அவரவர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் விசாரணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றதா? சஹ்ரான் அந்த அறைக்கு வர முன்னர் அதில் தங்கியிருந்தது யார்? கடந்த அரசாங்கம் அவ்வாறு எவரும் அங்கு தங்கியிருக்கவில்லை என்று கூறியது. எனவே இந்த அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததா என்று கேட்கின்றோம். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளிலும் சஹ்ரான் தங்கியிருந்த அறை தொடர்பான தகவல் மாத்திரம் வழங்கப்படவில்லை. அது எவ்வாறு இடம்பெற்றது?

இதேவேளை சஹ்ரான் தங்கியிருந்த அறைக்கு ஓரிரு அறைகளுக்கு அப்பால் காணப்பட்ட 623 இலக்க அறையில் தங்கியிருந்தவர்களும் குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போயுள்ளனர். அன்றைய தினம் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு இருவர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த இருவரும் யார்? எங்கிருக்கின்றனர்? இவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டள்ளதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Previous Post

கொட்டாஞ்சேனையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

Next Post

விமானத்தின் மீது மோதிய லொறி!

Editor1

Editor1

Related Posts

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
இலங்கைச் செய்திகள்

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி
இலங்கைச் செய்திகள்

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
Uncategorized

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
Next Post
விமானத்தின் மீது மோதிய லொறி!

விமானத்தின் மீது மோதிய லொறி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025

Recent News

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy