யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இரண்டு படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



















