அண்மையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய இரண்டு உயிரிழப்புகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் மேலதிக விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பகிடிவதை காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் மற்றும் காலி, கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞன் மரணம் என்பன தொடர்பான விசாரணைகளே இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கியுள்ளார்.
குறித்த இரண்டு மரணங்கள் தொடர்பான மேலதிக தகவல்களைக் கண்டறியுமாறும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறும் அவர் குற்றப் புலனாய்வுத்துறைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



















