திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த திருமதி. கனகராசா ஈஸ்வரி என்ற 53 வயதுடைய தாய் கடந்த 20 ஆம் திகதி காலை திருகோணமலைக்கு செல்வதாக கூறி பஸ்ஸில் சென்றுள்ள நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பெண் காணாமல்போனமை தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதேவேளை காணாமல்போன பெண், சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக மறந்துபோய் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் பாதை தவறிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.



















