இலங்கையில் மே 09 முதல் 24 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கபப்ட்டது.
இதன் போது, 30,000-க்கும் மேற்பட்ட நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நுளம்பு முட்டைகள் உள்ள 6,777 வளாகங்கள் இதன்போது இனங்காணப்பட்ட நிலையல், மேலும் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு ஏற்றவாறு பராமரிக்கப்பட்ட 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதேபோல், மேலும் 1,470 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நாட்டில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே , இது குறித்து கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



















