திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பப்லூ என்கிற பிரித்விராஜ். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கிய இவர், சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஏஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இந்த நிலையில், நடிகர் பப்லூ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று படுவைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது “நான் சினிமாவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். எல்லாவிதமான போராட்டம், அவமானங்களையும் பார்த்துவிட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் இது தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டேன். இதனால், மன அழுத்தத்திற்கு ஆளாகி, பணம், சொத்து, வீடு என அனைத்தையும் நான் இழந்துவிட்டேன்.
வாணி ராணி
பின் நான் என்ன செய்வது என தெரியாமல் இருந்தேன். அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் வாணி ராணி சீரியலில் ராதிகாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. ஏனென்றால், நடிகை ராதிகா சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கிறார். அவர், தமிழ் சினிமாவின் அவ்வையார். அவருக்கு ஜோடி என்றால் நானும் வயதானவனாகதான் இருக்க வேண்டும். அந்த சீரியல் எனக்கு கிழவன் என்கிற ஒரு பெயரை வாங்கி கொடுத்தது.




















