யாழ்.வடமராட்சி கிழக்கு ஆளியவளை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகிறது.
இதன்போது வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டிருந்த குறித்த உழவு இயந்திரத்தில் இருந்து நேற்று(26) இரவு மோட்டர் இயந்திரம் களவாடப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .



















