வவுனியா ஓமந்தை கிராம சேவையாளர் அலுவலக வளாகத்துக்குள் திருவள்ளுவர் சிலை இன்று (4) திறந்துவைக்கப்பட்டது.
கூமாங்குளம் கிராம அலுவலர் நாகராஜா ஶ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் சிலையை திறந்துவைத்தார்.
அன்னம்மா அறக்கட்டளையின் 10வது ஆண்டை முன்னிட்டு அதன் ஸ்தாபகர் அருட்பணி சிற்றம்பலம் கமலகண்ணனால் இந்த சிலை நிறுவப்பட்டது.
இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலஷண்குகன், தெற்கு பிரதேச சபையின் செயலாளர் சு.தெர்ஜனா, ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் செ.பவேந்திரன், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




















