வலப்பனை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று (30) காலை 10 மணியளவில் வலப்பனை பிதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் தேசப்பிரிய, திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் முன்னணியை சேர்ந்த உறுப்பினர் சுனில் குமாரசிங்க சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வலப்பனை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.
இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக நளின் தேசப்பிரிய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லக்ஷான் ரந்திக்க ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பிற்கு 34 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் 34 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் தேசப்பிரிய தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லக்ஷான் ரந்திக்க 29 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் ஐக்கிய மக்கள் முன்னணி சார்பாக சுனில் குமாரசிங்க பெயர் முன்மொழியப்பட்டது.
அதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக சமன் குமார தேசப்பிரிய பெயர் முன்மொழியப்பட்டது. இதன்போது, ஐக்கிய மக்கள் முன்னணி சார்பாக சுனில் குமாரசிங்க 34 வாக்குகளை பெற்று சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக சமன் குமார தேசப்பிரிய 29 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டார்.



















