அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சம்பவதினமான இன்று பொலிசாருடன் இணைந்து அரச புலனாய்வு பிரிவினர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
இதன் போது வம்மியடி ஆற்றுப் பகுதியில் இருக்கும் மரம் ஒன்றின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் சிலவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த பிரதேசதம் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் அங்கு அவர்களின் முகாம் இருந்துள்ளமை குறிப்பிடதக்கது.



















