தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவு இலங்கையின் கடற்கரைகளில் அதிகரித்துள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கல்பிட்டி, நீர்கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவு கடல் பகுதிகளில் இந்த கழிவுகள் பெரும்பாலும் கரைத்தட்டுவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சும் விசேட பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.



















