வரலாற்று சிறப்பு மிக்க அன்னதான கந்தன் என சிறப்பு பெற்ற ஆலயமான யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் (23) சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் சன்னிதியான் ஆலய கொடியேற்ற திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சன்னதியானின் அருளைப் பெற்றனர்.



















