ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.
அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துப் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜனாதிபதி வழங்கினார்.
விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் விபரங்கள் கீழே…
புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல்
01. திரு. எஸ்.எஸ்.கே. விதான
02. திரு. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க
03. திரு. ஏ.எம்.எம். ரியால்
04. திரு. டீ.பீ. முதுங்கொடுவ
05. திரு. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத்
06. திரு. ஜே. கஜனிதீபாலன்
07. திரு. டி.எம்.டி.சி. பண்டார
08. திரு. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன
09. திரு. டி.எம்.ஏ. செனவிரத்ன
10. திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா
11. திரு. ஜி.என். பெரேரா
12. திரு. ஏ. ஜுடேசன்
13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க
14. திரு.ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய
15. செல்வி கே.டி.என்.வி. லங்காபுர,
16. திரு. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க
17. திரு. எம்.ஐ.எம். ரிஸ்வி
18. திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா



















