மட்டக்களப்பு மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அரச உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர் சிறிஸ்கந்தராஜா மேனகா என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















