யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.



















