மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய நடவடிக்கையின் போது, ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் என கண்டறியப்பட்டுள்ளது.
மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபருக்குச் சொந்தமான வயலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை ஒரு அடி நீளம் கொண்டவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட தந்தங்களுடன் சந்தேக நபரும், இன்று (15) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.



















