நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துகள் நேற்று (14) நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, நேற்று இரவு, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – பொத்துவில் தம்பிலுவில் பகுதியில் வீதியில் அக்கரைப்பற்று திசையிலிருந்து பொத்துவில் திசை நோக்கிச் பயணித்த கார் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குப் பிறகு, காரை ஓட்டிச் சென்ற சாரதி காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியில் காரை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து, திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்தார்.
இறந்தவர் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 24 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடிய காரின் சாரதியை கைது செய்ய திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்று காலை, உப்புவெளி பொலிஸ் பிரிவில் திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் அனுராதபுரம் சந்திக்கு அருகில், 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் பலத்த காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.
இவ்வாறு இறந்தவர் சம்பூர் கிழக்கு, மூதூரில் வசித்து வந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



















