கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் மக்கள் வியந்து பார்க்கும் ஆச்சரியங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில்.
இக்கோவிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
சமீப காலமாக கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகள் சிலர் அசிங்கமான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
கோவிலின் உள் சுற்று பிரகார தூண்களில் மறைவிடத்தில் தஞ்சம் புகுந்து அத்துமீறி நடந்து கொள்வதாக பக்தர்களிடமிருந்து புகார்கள் குவிகின்றன.
மேலும் இதனை தடுத்து நிறுத்த நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.