இந்த அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் கூறிய விடயங்களை மக்களுக்கு நிறைவேற்றுவதற்குப் பகரமாக அரசியல் பழிவாங்களை ஆரம்பித்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த பழிவாங்களின் போது எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்தல் உட்பட 11067 பேருடைய தொழில் நீக்கம் என்பன இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.