ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், ரஞ்சனிற்கு தொலைபேசி அழைப்பெடுக்காதமைக்கு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
நேற்று (9) அலரி மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீங்களும் தொலைபேசியில் பேசினீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, சிரித்தபடியே- நல்லவேளையாக நான் அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கவில்லை. சிலவேளை, பிறந்தநாய் வாழ்த்து தெரிவிக்க மட்டும் அழைத்திருக்கலாம் என்றார்.