• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழ் மக்களுக்குத் தீர்வை விட சோறுதான் மிக மிக முக்கியம்!

Editor by Editor
January 12, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தமிழ் மக்களுக்குத் தீர்வை விட சோறுதான் மிக மிக முக்கியம்!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுதான் முக்கியம் என்று தமிழ்த் தலைமைகள் பொய் கூறுகின்றார்கள் எனவும் உண்மையில் அவர்களுக்குச் சாப்பாடுதான் முக்கியம் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதாவது சோறுதான் மிக மிக முக்கியம். அது கிடைக்காமல் அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல மூவின மக்களுக்கும் ஜனாதிபதி தான். சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் கோட்டாபய ஜனாதிபதியாவார் என்று அவருக்கும், எங்களுக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே தெரியும்.

ஆனால், தமிழ் மக்களின் வாக்குகளும் தனக்கு வேண்டும் என்று கோட்டாபய எங்களிடம் சொல்லியிருந்தார். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம். ஆனால், தமிழ் மக்களில் கொஞ்சப் பேர் தான் கோட்டாபயவுக்கு வாக்களித்தார்கள். அதற்காக தமிழ் மக்களை நாம் கவனிக்காமல் இருக்கமாட்டோம்.

வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வுதான் முக்கியம் என்று தமிழ்த் தலைமைகள் கூறுகின்றார்கள். ஆனால், அது பொய். இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் பச்சைப் பொய்தான் கூறி வருகின்றார்கள்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக ரணில் அரசுடன் ஒட்டியிருந்ததால் சம்பந்தனுக்கு வாகனங்களுடன் கொழும்பில் பங்களா கிடைத்தது. சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றித்திரிந்தார்கள்.

தங்களின் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைத்தார்கள். பல வசதிகளுடன் வீடுகளை வாங்கினார்கள்.

இப்படியான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் வடக்கு, கிழக்கு மக்களுக்கு – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுதான் முக்கியம் என்று பொய்யுரைக்கின்றார்கள்.

உண்மையில் தமிழ் மக்களுக்கு சாப்பாடு தான் முக்கியம். அதாவது சோறுதான் மிக மிக முக்கியம். அது கிடைக்காமல் வடக்கில் வசிக்கும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கி நின்றேன். அங்குள்ள பல பகுதிகளைப் போய் பார்த்தேன். அங்கு தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, ஒழுங்கான வீதிகள் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை. பொருளாதார வசதி இல்லாததால் அங்குள்ள மக்கள் சாப்பிடக் கஷ்டப்படுகின்றார்கள்.

நாம் ஜனாதிபதி கோட்டாபயவுடன் இம்மாதம் வடக்குக்குச் செல்லவுள்ளோம். அங்குள்ள உண்மை நிலவரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுவோம்.

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை – பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வழிகளைச் செய்யவுள்ளோம். அங்கு தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளோம்.

வடக்கிலுள்ள வீதிகளைப் புனரமைப்போம். அங்குள்ள மக்களுக்கு மின்சாரத்தைக் கொடுப்போம். தண்ணீர் கொடுப்போம். சகல அபிவிருத்திகளையும் செய்வோம்.

சிங்கள மக்கள் வாக்களித்தமைக்காக தமிழ் மக்களுக்கு நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது.

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அக்கற்றமாட்டோம். இராணுவம் முகாம் அதிகமாக இருக்கும் காணிகளை மட்டும் அகற்றி அந்தக் காணிகளை உரிய மக்களிடம் மீளக்கையளிப்போம்.

சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். “கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் நாம் உயிருடன் இருக்கமாட்டோம் என்று பயந்தோம். ஆனால், அவர் நல்ல மனிதர்போல் இருக்கின்றார்.

அவரின் செயல்களை இப்போது வெளிப்படையாகப் பார்க்கும்போது புரிகின்றது. எனவே, அடுத்த தடவை அவருக்கு நாம் ஆதரவு வழங்குவோம் என்று அந்த நபர் என்னிடம் கூறியிருந்தார்.

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களை அடிப்பார், துன்புறுத்துவார் என்று தேர்தல் காலத்தில் தமிழ்க் கட்சிகள் பொய்தான் சொன்னார்கள். அந்தக் கட்சிகளின் பொய்களை இனிமேல் எவரும் நம்பக்கூடாது.

நாம் அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தரப்புடன் பேசுவோம். ஆனால், சமஷ்டியைக் கொடுக்கமாட்டோம். அதற்காக மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே மக்கள் வாக்களித்தார்கள்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திலிருந்து நாம் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அதில் மூவின மக்களும் நன்மையடையும் பரிந்துரைகளை மட்டும் நடைமுறைப்படுத்துவோம். அதற்கு மேல் எம்மால் செல்ல முடியாது. மூவின மக்களும் நன்மையடையும் வகையில்தான் தீர்வை எம்மால் வழங்க முடியும்.

நாம் புதிய அரசு. நாம் பதவிக்கு வந்து இப்போது இரண்டு மாதங்கள்தான் நிறைவடைகின்றன. மார்ச் மாதம் ஜெனிவாவில் ஜ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும்போது எமது அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள்தான் நிறைவடையும்.

அதேவேளை, மார்ச்சில் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே, ஐ.நா. தீர்மான விவகாரம் தொடர்பில் பெப்ரவரி மாதத்துக்கிடையில் எம்மால் எதுவும் செய்ய முடியாது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜெனிவாவுடன் நாம் பேச கால அவகாசம் கேட்கவுள்ளோம். எனினும், இது தொடர்பில் ஜனாதிபதிதான் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவெடுப்பார்.

போரின்போது இரு தரப்பிலும் இழப்புக்கள் மற்றும் குற்றங்கள் இடம்பெற்றன. இந்த விவகாரம் நமது நாட்டுப் பிரச்சினை. எனவே, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனிவாவில் பேசத் தேவையில்லை. இங்கு தமிழ் மக்களுடன் பேசுவோம். ஓர் இணக்கத்துக்கு வருவோம்.

தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடுவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவை அரசு எடுக்கவில்லை. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் சிங்கள மொழியில் மட்டும்தான் தேசிய கீதம் பாடப்பட்டது.

ஆனால், 2015ஆம் ஆண்டுப் பின்னர்தான் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வருகின்றது. எனவே, இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தைப் பாடலாமா அல்லது சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதத்தைப் பாடலாமா என்று அரசு இனித்தான் இறுதி முடிவை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பவுண்டரில் உள்ளே-வெளியே தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்..!

Next Post

13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 65 வயது முதியவர்.. அலறிய சிறுமி, காப்பாற்றிய பொதுமக்கள்

Editor

Editor

Related Posts

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
இலங்கைச் செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்
இலங்கைச் செய்திகள்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்
இலங்கைச் செய்திகள்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
புதிய கல்விச் சீர்திருத்தம் : சாதாரண தரப் பரீட்சையில் 5 முக்கிய பாடங்கள்
இலங்கைச் செய்திகள்

புதிய கல்விச் சீர்திருத்தம் : சாதாரண தரப் பரீட்சையில் 5 முக்கிய பாடங்கள்

December 15, 2025
பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கைது
இலங்கைச் செய்திகள்

பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் கைது

December 15, 2025
தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்
இலங்கைச் செய்திகள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
Next Post
13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 65 வயது முதியவர்.. அலறிய சிறுமி, காப்பாற்றிய பொதுமக்கள்

13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 65 வயது முதியவர்.. அலறிய சிறுமி, காப்பாற்றிய பொதுமக்கள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025

Recent News

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy