• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கோட்டாபயவின் உத்தரவால் மேலும் பல அதிரடி மாற்றங்கள்

Editor by Editor
January 15, 2020
in இலங்கைச் செய்திகள்
0
கோட்டாபயவின் உத்தரவால் மேலும் பல அதிரடி மாற்றங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சட்டதிட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் தேவையற்ற அனுமதி பெறும் நடவடிக்கைகள் அகற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

2025ஆம் ஆண்டளவில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக வருமானத்தைப் பெறும் இலக்கினை அடைவதற்கான துரித பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய பிரதான துறையாக சுற்றாலா துறையை மேம்படுத்த வேண்டும்.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த துறையில் அனுபவமும் அர்ப்பணிப்புமிக்க திறமையான குழுவொன்று எமக்கு அவசியமாகும். அனைத்து படிமுறைகளிலும் துரித பெறுபேறுகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டு மக்களின் நன்மைக்காக தேவையான அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்ள நான் தயாராக உள்ளேன்.

மேற்கொள்ளும் அந்த அனைத்து தீர்மானங்களினதும் பெறுபேறுகளை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

குறித்த நோக்கத்துடனான வேலைத்திட்டங்கள் காணப்படுமாயின் எந்தவித சவால்களையும் வெற்றிகொள்ள நான் தயாராக உள்ளேன்.

சுற்றுலா துறையில் இனங்காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் துறையின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் குறித்து இதன்போது விரைவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும். விமான நிலைய வசதிகள் முதல் அனைத்து சேவைகளும் மேம்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இடங்களை மேம்படுத்துதல் மற்றும் அவற்றை பிரபல்யப்படுத்துவதற்கான விரிவான பிரசார நடவடிக்கைகளின் தேவைப்பாடு குறித்தும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு ஆயுர்வேத சிகிச்சை முறை சுற்றுலா பிரயாணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. கடலலை விளையாட்டுக்கள், இலங்கை தேயிலை உள்ளிட்ட இலங்கைக்கு உரித்தான விசேட, தனித்துவமான சுற்றுலா பிரயாணிகளைக் கவரக்கூடிய துறைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

சுற்றுலா பயணிகளின் தேவைகள் இனங்காணப்பட்டு அதற்கமைய வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு சுற்றுலா பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு முறையான பொறிமுறையொன்று தேவையாகும் என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் பிரதிபிம்பத்தை உயர்த்துவதற்கும் இலங்கை சுற்றுலா செய்வதற்கு பொருத்தமான நாடாகும் என பிரபல்யப்படுத்துவதற்கும் வெளிநாட்டு தூதுவர்களின் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சுற்றுலா சபையினருக்கு பணிப்புரை வழங்கினார்.

ஸ்ரீ லங்கன் உள்ளிட்ட விமான சேவைகள் சிறந்த தரத்துடன் மேம்படுத்தப்படல் வேண்டும். 04 நிறுவனங்களாக செயற்பட்டுவரும் சுற்றுலா சபை ஒன்றிணைந்து சகல நிறுவனங்களும் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

நேரடி விமான சேவைகளை ஸ்தாபிப்பதன் மூலம் இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். ஐரோப்பிய நாடுகளை இலக்கு வைத்து நேரடி விமான சேவைகளை ஆரம்பித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறை தொடர்பான பட்டப்படிப்பினை தொடரும் மாணவர்களுக்கு ஹோட்டல் பாடசாலையில் பயிற்சியளித்து ஹோட்டல் முகாமையாளர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலா பொலிஸ் சேவையை மீண்டும் ஸ்தாபிக்கவும் அத்துறைக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சட்டதிட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் தேவையற்ற அனுமதி பெறும் நடவடிக்கைகள் அகற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்க பிரார்த்திப்போம்…..சம்பந்தன்

Next Post

பாதுகாப்பு அமைச்சு அதிரடி உத்தரவு…

Editor

Editor

Related Posts

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
இலங்கைச் செய்திகள்

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இலங்கைச் செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
Next Post
பாதுகாப்பு அமைச்சு அதிரடி உத்தரவு…

பாதுகாப்பு அமைச்சு அதிரடி உத்தரவு...

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy