• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம்!

Editor by Editor
January 19, 2020
in இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள்
0
இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் அதிகார சக்திகளின் மோதல்களுக்கு அகப்பட்டுக் கொள்ளாமல் இலங்கை நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை மிக்க ஒரு நாளாக அமைந்திருந்தது.

ஏனென்றால் அன்று அவர் ஒரே நாளில் உலகின் மூன்று முக்கிய அதிகார சக்திகளின் உயர்நிலைப் பிரதிநிதிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகிய மூவரையும் ஒரே நாளில் குறிப்பிட்ட சில மணித்தியால இடைவெளிக்குள் சந்தித்துப் பேசியிருந்தார் ஜனாதிபதி.

இந்த மூவரினது சந்திப்புக்களும் ஒரே மாதிரியானவையாக இருக்கவில்லை. மூன்று நாடுகளினது இலக்குகளும் நோக்குகளும் வேறுபட்டவையாக இருந்தன.

இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைத் தொடரும் இலக்குடன் வந்திருந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ்.

இலங்கையுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் வந்திருந்தார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ்.

இலங்கையில் சீனாவின் பொருளாதார முதலீடுகள் தொடர்பாகவும் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் பேச வந்திருந்தார் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி.

இந்த மூவரிடமும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேசப்பட்ட முக்கியமான ஒரு பொதுப்படையான விடயமும் இருந்தது.

அது ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரம். ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளன.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கமும் முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் ஜெனீவா தீர்மானத்தை ஏற்க முடியாது, அதிலிருந்த விலகி விடுவோம் என்று கூறியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இப்போது ஜெனீவா தீர்மானம் தொடர்பாக உள்ளக கலந்துரையாடல்களை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருப்பதாக தகவல்.

விரும்பியோ விரும்பாமலோ இலங்கை அரசாங்கம் ஜெனீவா கூட்டத்தொடரில் ஏதோ ஒரு பதிலைக் கூறியே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறது.

இவ்வாறான இக்கட்டான நிலையில் இருக்கும் சூழலில் சீன மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள், சர்வதேச அரங்கில் குறிப்பாக ஐ.நா அரங்கில் இலங்கைக்கு உதவியாக நிற்போம் என்று கூறியிருக்கின்றன.

இலங்கை மீது மூன்றாவது நாடு ஒன்று தலையீடு செய்வதை சீனா அனுமதிக்கப் போவதில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி கொழும்பிலிருந்து புறப்பட முன்னர் கூறியிருந்தார்.

ஆக ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் இந்தியாவின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு விட்டால் இந்த முறை ஜெனீவா கூட்டுத் தொடரை சுலபமாக கையாண்டு விடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது அரசாங்கம்.

ஜெனீவா கூட்டத் தொடரில் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கூட தமிழ் ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில் கூறியிருக்கிறார்.

ஆனால் சீன ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்களைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேசிய அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், ஜெனீவா கூட்டத் தொடர் குறித்தும் பேசியிருக்கிறார்.

அவர் பல முக்கியமான விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியிருக்கிறார். ஜெனீவா கூட்டத்தொடரில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

அத்துடன் மனித உரிமைகள், நாடாளுமன்றத் தேர்தல், எம்.சி.சி உடன்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றன. இந்தச் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடிதம் ஒன்றையும் நேரில் கையளித்திருக்கிறார் அலிஸ் வெல்ஸ்.

அந்தக் கடிதத்தில் இலங்கையுடனான கூட்டு மற்றும் விருப்பங்கள் குறித்த அமெரிக்காவின் உறுதிப்பாடு குறித்து எடுத்துக் கூறப்பட்டிருந்தது என கொழும்பிலிருந்து திரும்ப முன்னர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் அலிஸ் வெல்ஸ்.

உண்மையில் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் என்ன என்பது இன்னமும் வெளியே வரவில்லை. ஆனால் அதில் அரசாங்கத்திற்கு சிக்கலான சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் சந்தித்தவுடனேயே அவர் எம்.சி.சி உடன்பாடு குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன.

ஆனால் மறுநாள் அரசாங்கப் பேச்சாளரான பந்துல குணவர்தன அதனை நிராகரித்திருந்தார். அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிகாரில் சந்திப்பை நடத்தினால் எதிர்மறையாக சிந்திக்கக்கூடாது என்றம் அவர் கூறியிருந்தார்.

எம்.சி.சி உடன்பாடு மனித உரிமைகள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசப்பட்டதை அலிஸ் வெல்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அலிஸ் வெல்ஸ் அம்மையாருடன், ஜனாதிபதியையும் பிரதமரையும் மற்றொரு அமெரிக்க முக்கியஸ்தரும் சந்தித்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட பதில் உதவியலாளரும், தேசிய பாதுகாப்புச் சபைக்கான தெற்கு மத்திய ஆசியாவிற்கான மூத்த பணிப்பாளருமான லிசா கேட்டிஸ் தான் அவர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்பட்ட கடிதம் அவரது பதில் உதவியாளர் லிசா கேட்டிஸ் சந்திப்புகளில் பங்கேற்றது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்காவும் தீவிரமான நகர்வுகளை முன்னெடுக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையில் ரஷ்யா தனது பாதுகாப்பு நலன்களை விரிவுப்படுத்த நினைக்கிறது. அதற்கான பேச்சுகளிலும் ஈடுபட்டுள்ளது. சீனாவும் முதலீடுகளின் மூலம் இலங்கையைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க முனைகிறது.

இவ்வாறான நிலை தொடர்ந்தால் இலங்கை தனது கையை விட்டுப் போய் விடும் என்ற கவலை அமெரிக்காவுக்கு இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையை கைக்குள் வைத்திருப்பதற்கு அமெரிக்கா தரப்பில் இரகசிய காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உத்தேசித்திருக்கிறார். அவரது பயணத் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படாவிடினும் அதற்கான பேச்சுக்கள் இரண்டு நாடுகளினதும் இராஜ தந்திரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிற்கு அடுத்த மாத இறுதியில் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படும் பயணத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இலங்கைக்கும் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

2016ஆம் அண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கைக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது பயண ஒழுங்கு நாட்கள் இலங்கையில் வெசாக் கொண்டாட்டங்கள் நடைபெறும் காலம் என்பதால் இலங்கை அந்த திகதிகளை நிராகரித்திருந்தது.

அதற்குப் பின்னர் பராக் ஒபாமாவோ அல்லது அவருக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியாகிய டொனால்ட் ட்ரம்போ, இலங்கைக்கு வரும் முனைப்பை காட்டவில்லை.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலில் அமெரிக்கா இன்னும் தீவிரமாகச் செயற்பட வேண்டிய நிலையை உணர்த்தியிருக்கிறது. அமெரிக்கா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் கைகுலுக்கிக் கொள்ளத் தயங்காது.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் கைகோர்த்துக் கொள்வதற்கு சீனாவோ, ரஷ்யாவோ அல்லது ஜெனீவாவோ தமிழர் விவகாரங்களோ தடையாக இருப்பதை அமெரிக்கா விரும்பாது.

இந்த நிலையில் நிலைமையை தமது சாதகமாக மாற்றிக் கொள்வதற்காக அடுத்த மாதம் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது ஒரு குறுகிய நேரப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கு வந்து சென்றால் கூட அது ஆச்சர்யமில்லை.

தேர்தல் காலத்தில் எம்.சி.சி உள்ளிட்ட அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து மோசமான விமர்சனங்களை முன்வைத்து வந்த தற்போதைய அரசாங்கம் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கியிருக்கிறது.

இதற்கு அமெரிக்கா தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணம் என்று பேசப்பட்டாலும் அவ்வாறு எதுவும் இல்லை என்று அரசாங்கமே கூறுகிறது.

தமிழர் விவகாரத்தையோ அல்லது வேறெந்த விவகாரத்தையோ தூக்கி நிறுத்தி தனது நலன்களை இழக்க அமெரிக்கா விரும்பாது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனது நாட்டினதும் தனது மக்களிதும் பாதுகாப்புத்தான் முக்கியமானது.

அதற்காக வேறெந்த நலன்களைத் துறக்கவும் தயங்காது. ஒரு பக்கம் அமெரிக்கா இன்னொரு பக்கம் சீனா, மற்றொரு பக்கம் ரஷ்யா என்று உலக வல்லாதிக்க சக்திகளின் ஆட்டக்காய்களுக்கு மத்தியில் சிக்கியிருக்கிறது இலங்கை.

இது போன்றதொரு நிலை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் வரும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். “புவியியல் ரீதியான மூலோபாய அமைவிடத்தில் இலங்கை இருப்பதால் பல அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அவற்றைக் கடப்பதற்கான ஒரே வழி, பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். பொருளாதார சுதந்திரம் அரசியல் சுதந்திரத்தை உறுதி செய்யும்” என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்தில் இருந்தே அவர் எதிர்கொண்டுள்ள நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.

Previous Post

பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிக்கு!

Next Post

கிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும்…. விபச்சார விடுதி..!

Editor

Editor

Related Posts

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!
இலங்கைச் செய்திகள்

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி
இலங்கைச் செய்திகள்

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை
Uncategorized

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!
இலங்கைச் செய்திகள்

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா…!

December 9, 2025
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!
இலங்கைச் செய்திகள்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்!

December 9, 2025
Next Post
கிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும்…. விபச்சார விடுதி..!

கிளிநொச்சியில் பகிரங்கமாக நடத்தப்படும்.... விபச்சார விடுதி..!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025

Recent News

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

பிரதான மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

December 10, 2025
கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

கொழும்பு வெள்ளத்தில் மூழ்க காரணம் இதுதான்…! அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

December 10, 2025
ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

ஆசிரியர்கள் – அதிபர்களுக்கான நிவாரணம்…! அரசுக்கு பறந்த கோரிக்கை

December 10, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy