துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சிற்கு சொந்தமான வணிக கப்பற் செயலக அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாகாத வகையில் அனைத்து செயற்பாடுகளையும் ஒன்லைன் முறையில் செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக கப்பற் செயலக அலுவலகத்திற்கு நேற்றைய தினம் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்நிறுவனம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கே பல குறைப்பாடுகள் நிலவுகின்றன. இந்த நிறுவனத்திற்கு வருகை தரும் சேவை பெறுனர்கள் தமக்கான சேவைகளை பெற்றுக் கொள்வதில் காலதாமதம் நிலவுகின்றது.
எனவே நானும், செயலாளரும் இவ்விடத்திற்கு வருகைதந்து இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தோம். இங்கே பல குறைப்பாடுகள் காணப்படுவதை நாம் அவதானித்தோம். இவற்றை திருத்தியமைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலேசனை வழங்கியுள்ளோம்.
பணம் அறவிடுதல் செயற்பாட்டினை Online முறைக்கும், பணத்தை வங்கிக்குச் சென்று வைப்பிலிடுவதற்கும் ஏற்ற வகையில் மாற்றியமைக்குமாரும், மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துமாரும் கூறினோம்.
இம்மாற்றங்களை செய்தால் பெருமளவிலான பிரச்சினைகள் குறைத்து கொள்ளலாம். ஒருவார காலப்பகுதிக்குள் இம்மாற்றங்களை செய்ய வேண்டுமென நாம் கூறியுள்ளோம். அதுவே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பொருட்டே நாம் இவ்விடத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டள்ளார்.