யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.