• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் டீல் காரர்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது: சஜித்!

Editor by Editor
January 27, 2020
in இலங்கைச் செய்திகள்
0
உள்ளூராட்சி தேர்தலில் டீல் காரர்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது: சஜித்!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய கூட்டணி அமைத்துக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை வெற்றி கொள்வோம். அதற்கு தலைமைத்துவம் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அனைவரையும் இணைத்துக் கொண்டே எமது பயணம் அமைய வேண்டும். ஒற்றுமையே எமது பலம். அது பெயரளவில் இருக்க முடியாது. டீல் காரர்களுடன் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.

உள்ளூராட்சி மனற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை சஜித் பிரேமதாச சந்திக்கும் நிகழ்வு நேற்று (26) கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் அடைந்த பின்னடைவால் நாம் ஒருபோதும் சோர்வடையக்கூடாது. பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலேயே நான் ஜனாதிபதி வேட்பாளரானேன். என்றாலும் எனது வேலைத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு 55 இலட்சம் மக்கள் எமக்கு வாக்களித்தனர். அவர்களை யாரும் கைவிட்டு விட முடியாது. அதேபோன்று பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களை கண்டு எமக்கெதிராக வாக்களித்த மக்கள் தற்போது உண்மையை உணரத் தொடங்கியுள்ளனர். அதனால் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு, பொதுத் தேர்தலை நோக்கி நாம் முன்னேற வேண்டும்

அனைத்து முற்போக்கு சக்திகளையும் கூட்டிணைத்துக் கொண்டு புதிய கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைவோம். அதற்காக கிராம மட்டத்திலிருந்து நீங்கள் சக்தி பெற வேண்டும். பொதுத் தேர்தலில் புதிய மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்த நாம் தயார். அதற்காக யாரையும் ஒதுக்க மாட்டோம். அனைவரையும் இணைத்துக் கொண்டே செல்ல வேண்டும். புதிய கூட்டணிக்கு தலைமைதாங்க நான் தயார். ஒற்றுமையே எமது பலம். ஒற்றுமை பெயரளவில் இருக்க முடியாது. அதேபோன்று எமது எதிர்த்தரப்புடன் டீல் போட்டுக் கொண்டு செயற்படுபவர்களுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. டீல் அரசியல் கட்சிக்கும் நல்லதில்லை. நாட்டுக்கும் நல்லதில்லை.

ஜனாதிபதி தேர்தலில் பிரசாரத்திற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிற்கும் சென்றிருந்தேன். அதேபோல நன்றி செலுத்த தற்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் செல்லும் கிராமங்களில் மக்கள புதிய இலக்கை நோக்கி செல்ல தயாராகவே இருக்கிறார்கள். அதற்காக விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு வருமாறே எம்மிடம் சொல்கிறார்கள்.

புதிய அரசு பதவியேற்றதும் எமது தரப்பினர் அரசியல் பழிவாங்கலிற்கு உள்ளாகி வருகிறார்கள். பலர் தொழிலை இழந்துள்ளனர். சிலர் தூரப் பிரதேசங்களிற்கு மாற்றப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதும், அரசியல் பழிவாங்கலிற்கு இலக்கானவர்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது முதற்பணியாக இருக்கும்.

ஐ.தே.க மற்றும் கூட்டணியின் ஒற்றுமை அதன் உறுப்பினர்களிற்கு  பயனுள்ள முடிவுகளைக் கொண்டு வர வேண்டும்.

அரசியல் எதிரிகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து இந்த கூட்டணி விடுபட வேண்டும். மேலும், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கட்சி மற்றும் அரசாங்கத்திற்கு வரும்போது முடிவெடுக்கும் பணியில் பங்கேற்க அனுமதிக்கப்படும் ஒரு வழிமுறை இருக்க வேண்டும். நல்ல தகவல்கள் அடிமட்ட மட்டத்திலிருந்து மேலே செல்கின்றன. எனவே ஒரு பயனுள்ள தகவல் பாயும் முறை இருக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐ.தே.கவோ, கூட்டணியோ யாருடனும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஒரு பௌத்த தேசம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் விவாதம் இல்லை.  ஆனால்‘ எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கட்டும் ’என்று கற்பிக்கும் புத்தரின் பிரசங்கத்தை கடைபிடிக்க வேண்டும். பௌத்தம் முன்னுரிமையளிக்கப்பட்டாலும், ஏனைய மதங்கள் தமக்கான சுதந்திரத்துடன் செயற்படும்.

கட்சி அல்லது புதிய கூட்டணி ஒரு தனிநபரின் சொத்தாக மாறக்கூடாது, மாறாக அவர்களை ஆதரிக்கும் அனைவருக்கும் ஒரு சொத்தாக மாற வேண்டும் என்றார்.

பின்னர், புதிய கூட்டணிக்கு தான் தலைமை தாங்குவதை அங்கீகரிக்கும் உறுப்பினர்களை கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். கூட்டத்திலிருந்தவர்கள் கைகளை உயர்த்தினர்.

“எல்லோரும் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதால் இது ஜனநாயகம். நாங்கள் எந்த முன் திட்டத்தையும் செய்யவில்லை அல்லது சிரிகோதாவைச் சேர்ந்த எவரும் இந்த நபர்களை கைகளை உயர்த்தவோ அல்லது கூச்சலிடவோ கேட்கவில்லை. இருப்பினும், கடந்த காலங்களில் இதுபோன்ற அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன் ”என்றார்.

Previous Post

புணாணை பகுதியில் புகையிரத கடவையில் அமர்ந்து தொலைபேசியில் பாட்டு கேட்ட இளைஞனுக்கு எமனாக வந்த மீனகயா!

Next Post

மறவன்புலவு காற்றாலை விவகாரம்- சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கைது!

Editor

Editor

Related Posts

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி
இலங்கைச் செய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!
இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி
இலங்கைச் செய்திகள்

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025
மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை
இலங்கைச் செய்திகள்

மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை

December 11, 2025
அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

December 10, 2025
Next Post
மறவன்புலவு காற்றாலை விவகாரம்- சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கைது!

மறவன்புலவு காற்றாலை விவகாரம்- சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் கைது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025

Recent News

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டுக்கு தயாராகும் Amazon மற்றும் Microsoft!

December 11, 2025
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

இலங்கை வந்தார் அமெரிக்க இராஜதந்திரி

December 11, 2025
யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு – வெளியான தகவல்

December 11, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy